என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
பண்ருட்டி அருகே கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பல்லவராயநத்தம் குயிலா பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவகுரு. இவரது மகள் சிவசங்கரி (வயது 17). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.பி.எம். படித்து வருகிறார். விடுமுறை நாட்களில் பண்ருட்டியில் உள்ள வீட்டுக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் சிவசங்கரிக்கும், சன்னியாசி பேட்டை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் வடிவேல் (23) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. அன்று முதல் 2 பேரும் பல இடங்களுக்கு தனிமையில் சென்று பழகி வந்தனர்.
இருவரின் பெற்றோருக்கும் தெரியாமல் கடந்த டிசம்பர் மாதம் புதுவை காலாப்பட்டு பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் சிவசங்கரியும், வடிவேலும் திருமணம் செய்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து வழக்கம்போல் சிவசங்கரி கல்லூரிக்கு சென்று விட்டார். வடிவேல் வேலைக்கு சென்று வந்தார்.
பின்னர் அடிக்கடி அவர்கள் தனிமையில் வெளியூர் சென்று வந்தனர். அப்போது வடிவேல், சிவசங்கரியிடம், நமக்குதான் திருமணம் நடந்து விட்டதே. இனி யாருக்கும் பயப்படதேவையில்லை என்று கூறி பல முறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வடிவேல், சிவசங்கரியை பார்ப்பதையும், செல்போனில் பேசுவதையும் நிறுத்தி விட்டார். இதனால் மனவேதனை அடைந்த சிவசங்கரி சன்னியாசிப் பேட்டைக்கு சென்று வடிவேலின் வீட்டுக்கு சென்றார்.
அங்கு இருந்த வடிவேலிடம், எதற்காக என்னிடம் போனில் பேசவில்லை. என்னையும் சந்திக்க வரவும் இல்லை என்று கேட்டார்.
உடனே வடிவேல், நீ வேறு சமூகத்தை சேர்ந்த பெண் என்பதால் உன்னை எனது பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் நாம் பிரிந்து விடலாம். எனவே நான் ஏற்கனவே கட்டிய தாலியை கழற்றி என்னிடம் கொடுத்து விடு என்று கூறியுள்ளார்.
ஆனால், தாலியை கழற்றி கொடுக்க சிவசங்கரி மறுத்து விட்டார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வடிவேல், சிவசங்கரியை தகாதவார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலுவை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்