என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்: திருநாவுக்கரசர்
Byமாலை மலர்31 Oct 2018 9:46 AM GMT (Updated: 31 Oct 2018 9:46 AM GMT)
20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார். #Congress #Thirunavukkarasar #DMK
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 34-வது நினைவுநாள் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் குமரி அனந்தன் உள்பட ஏராளமான முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தேர்தல் நடந்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த தேர்தல் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.
இதில் காங்கிரஸ் எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்பது தி.மு.க.வுடன் ஆலோசனை நடத்திய பிறகுதான் முடிவு செய்யப்படும். தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகவே உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #DMK
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 34-வது நினைவுநாள் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் குமரி அனந்தன் உள்பட ஏராளமான முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தேர்தல் நடந்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த தேர்தல் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.
இதில் காங்கிரஸ் எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்பது தி.மு.க.வுடன் ஆலோசனை நடத்திய பிறகுதான் முடிவு செய்யப்படும். தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகவே உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #DMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X