என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாற்றுத்திறனாளிகளை மதிக்கும் அரசு மலர வேண்டும்- கனிமொழி
Byமாலை மலர்2 Dec 2018 5:22 AM GMT (Updated: 2 Dec 2018 5:22 AM GMT)
“மாற்றுத்திறனாளிகளை மதிக்கும் அரசு மலர வேண்டும்” என சென்னையில் நடந்த மாநாட்டில் கனிமொழி எம்.பி. பேசினார். #DMK #Kanimozhi
சென்னை:
டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் சென்னையில் ‘மாற்றுத்திறனாளிகள் அரசியல் மாநாடு’ நடந்தது. இதில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்று பேசியதாவது:-
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கருணையோடு நிறைவேற்றித்தர வேண்டிய அவசியமில்லை. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. மாற்றுத்திறனாளிகளுக்காக பல நல்ல திட்டங்களை தி.மு.க. நிறைவேற்றி தந்திருக்கிறது.
ஆனால் என்று எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் என்ன பிரச்சனை? என்று கேட்கக்கூட நாதியில்லாத ஒரு சூழலில் தமிழக மாற்றுத் திறனாளிகள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் கடவுளின் குழந்தைகள் என்கிறார்கள். ஆனால் காலில் ‘காலிபர்’ சாதனம் போட்டிருக்கும் காரணத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு பல கோவில்களில் அனுமதி இல்லை. கடவுளின் குழந்தைகளுக்கு கடவுளை காணக்கூட உரிமை இல்லையா? பெண்களை தெய்வங்கள் என்று போற்றும் அளவுக்கு மதிப்பு தருவதில்லை. கடவுளின் குழந்தை என்றெல்லாம் அழைக்க வேண்டாம். மனிதர்களாக மதித்தால் போதும்.
இதற்கு மாற்றுத்திறனாளிகளை மதிக்கும் அரசு மலர வேண்டும். உங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க தி.மு.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார். #DMK #Kanimozhi
டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் சென்னையில் ‘மாற்றுத்திறனாளிகள் அரசியல் மாநாடு’ நடந்தது. இதில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்று பேசியதாவது:-
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கருணையோடு நிறைவேற்றித்தர வேண்டிய அவசியமில்லை. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. மாற்றுத்திறனாளிகளுக்காக பல நல்ல திட்டங்களை தி.மு.க. நிறைவேற்றி தந்திருக்கிறது.
ஆனால் என்று எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் என்ன பிரச்சனை? என்று கேட்கக்கூட நாதியில்லாத ஒரு சூழலில் தமிழக மாற்றுத் திறனாளிகள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் கடவுளின் குழந்தைகள் என்கிறார்கள். ஆனால் காலில் ‘காலிபர்’ சாதனம் போட்டிருக்கும் காரணத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு பல கோவில்களில் அனுமதி இல்லை. கடவுளின் குழந்தைகளுக்கு கடவுளை காணக்கூட உரிமை இல்லையா? பெண்களை தெய்வங்கள் என்று போற்றும் அளவுக்கு மதிப்பு தருவதில்லை. கடவுளின் குழந்தை என்றெல்லாம் அழைக்க வேண்டாம். மனிதர்களாக மதித்தால் போதும்.
இதற்கு மாற்றுத்திறனாளிகளை மதிக்கும் அரசு மலர வேண்டும். உங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க தி.மு.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார். #DMK #Kanimozhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X