என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமணம் செய்து கொள்வதாக உல்லாசம்- பணத்தை அபகரித்து பெண்ணுக்கு கொலை மிரட்டல்
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் சொசைட்டி காலனியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 42). இவர் தாராபுரம் சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கே.அத்திக்கோம்பையைச் சேர்ந்த அன்னாள் ஞானசுந்தரி என்பவர் வேலைக்கு சேர்ந்தார்.
இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் ஞானசுந்தரியை காதலிப்பதாக முத்துராஜா கூறினார். மேலும் அவரை பல இடங்களுக்கு தனியாக அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இது மட்டுமின்றி ஞானசுந்தரியிடம் ரூ.5 லட்சம் பணம் வாங்கி முத்துராஜா தனது கடனை அடைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஞானசுந்தரி கேட்கவே தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக அவர் கூறினார்.
இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த ஞானசுந்தரி தான் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தர மறுத்ததுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஞானசுந்தரி புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் முத்துராஜா, அவரது மனைவி ஈஸ்வரி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்