என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் வெளிநாட்டு பணம்-தங்கம் பறிமுதல்
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்றிரவு தனியார் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த முகமது உசேன் என்பவரின் கைப்பையை சோதனை செய்த போது அதில் இங்கிலாந்து, மலேசியா, அமெரிக்க நாட்டுப் பணம் இருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7லட்சத்து 10 ஆயிரம் வைத்திருந்தார். இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதே போல் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது தஞ்சையை சேர்ந்த சாந்தி என்பவர் விதிமுறைகளை மீறி ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 100 கிராம் தங்கத்தை அணிந்து வந்திருந்தார். அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் முகமது உசேன், சாந்தியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். #TrichyAirport #GoldSmuggling
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்