என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பாசனத்துக்கு பவானி சாகர் அணை திறப்பு- முதல்வர் பழனிசாமி உத்தரவு
Byமாலை மலர்20 Dec 2018 6:48 AM GMT (Updated: 20 Dec 2018 6:48 AM GMT)
பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன் கோட்டை கால்வாய் மற்றும் காலிங்கராயன் வாய்க்காலின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு 25-ந்தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை கால்வாய்கள், காலிங்கராயன் வாய்க்கால் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை கால்வாய் மற்றும் காலிங்கராயன் வாய்க்காலின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு 25-ந்தேதி முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.
இதனால், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம், அந்தியூர், பவானி, ஈரோடு மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றில் உள்ள 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TNCM #Edappadipalaniswami
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை கால்வாய்கள், காலிங்கராயன் வாய்க்கால் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை கால்வாய் மற்றும் காலிங்கராயன் வாய்க்காலின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு 25-ந்தேதி முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.
இதனால், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம், அந்தியூர், பவானி, ஈரோடு மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றில் உள்ள 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TNCM #Edappadipalaniswami
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X