search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் சீலநாயக்கன்பட்டியில் தனியார் பஸ் கம்பெனிக்குள் புகுந்த கொள்ளையன்
    X

    சேலம் சீலநாயக்கன்பட்டியில் தனியார் பஸ் கம்பெனிக்குள் புகுந்த கொள்ளையன்

    சேலம் சீலநாயக்கன்பட்டியில் தனியார் பஸ் கம்பெனிக்குள் புகுந்த கொள்ளையனை பிடித்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன் பட்டியில் தனியார் பஸ் கம்பெனி உள்ளது.

    இந்த பஸ் கம்பெனிக்குள் நேற்றிரவு 30 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் திடீரென புகுந்தார். இதை பார்த்த அங்கு பணியில் இருந்து ஊழியர்கள் அவரை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அந்த மர்ம நபர் அங்குள்ள கழிவறையில் பதுங்கி கொண்டார். நீண்ட நேரத்திற்கு பிறகு கதவை திறந்து வெளியில் வந்த அவரை பிடித்து தர்ம அடி கொடுத்த ஊழியர்கள் அவரிடம் விசாரித்தனர். அவர் வாய் திறக்க மறுத்து விட்டார்.

    அப்போது பொருட்களை திருடும் நோக்கில் கம்பெனியில் புகுந்திருக்கலாம் என்றும் இதே போல மேலும் பல இடங்களில் புகுந்து கொள்ளையடித்திருக்கலாம் என்று சந்தேகப்பட்ட ஊழியர்கள் மர்ம நபர் குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அவர் வாய் திறக்க மறுத்து வருகிறார். இதனால் அவர் ஊமையா அல்லது அப்படி நடிக்கிறாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×