search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
    X

    கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

    புதுவையில் கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை குருசு குப்பத்தை சேர்ந்தவர் தேவா (வயது 23). இவர் கவுண்டன் பாளையம் ஆருத்ரா நகரில் ஒரு வாடகை வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார்.

    இவர், ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த கணவனை இழந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருந்தார். நாளடைவில் அந்த பெண்ணின் மகளான பிளஸ்-2 மாணவிக்கு தேவா பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு அந்த மாணவியின் தாயாரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் இது குறித்து அந்த மாணவி குழந்தைகள் நல குழுவிடம் புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து குழந்தைகள் நல குழு தலைவர் ராஜேந்திரன் விசாரித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார்.

    இந்த புகாரை ஏற்று இதன் மீது விசாரணை நடத்தும்படி ரெட்டியார் பாளையம் போலீசுக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    இதன்படி ரெட்டியார் பாளையம் போலீசார் விசாரணை நடத்திய போது மாணவிக்கு தேவா பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தேவாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×