search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்- சாத்தூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர், நர்சு மீது வழக்கு
    X

    கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்- சாத்தூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர், நர்சு மீது வழக்கு

    சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்றுடன் இருந்த ரத்தத்தை செலுத்திய விவகாரம் தொடர்பாக டாக்டர், நர்சு உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சாத்தூர்:

    எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக அந்த கர்ப்பிணியும், அவருடைய கணவரும் சாத்தூர் போலீசில் புகார் செய்தனர். அதில், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்திய தினத்தன்று பணியில் இருந்த சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியின் டாக்டர், செவிலியர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரியின் ரத்த வங்கி பணியாளர் ஆகிய 3 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 269 (கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் செயல்படுத்தல்), 338 (கொடுங்காயம் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×