search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் பாராளுமன்ற தேர்தல் குறித்து தேமுதிக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    திருச்சியில் பாராளுமன்ற தேர்தல் குறித்து தேமுதிக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    திருச்சியில் பாராளுமன்ற தேர்தல் குறித்து தே.மு.தி.க. சார்பில் அனைத்து அணி மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. #dmdk #parliamentelection
    திருச்சி:

    திருச்சியில் தே.மு.தி.க. சார்பில் அனைத்து அணி மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தே.மு.தி.க. தலைவர் டி.வி.கணேஷ் தலைமை தாங்கினார்.  அவை தலைவர் அலங்கராஜ் முன்னிலை வகித்தார்.தே.மு.தி.க. மாநில இளைஞரணி செயலாளர் நல்லதம்பி, மாநில மகளிர் அணி செயலாளர் மாலதி, மாநில வக்கீல் அணி செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில நெசவாளர் அணி செயலாளர் செந்தில்குமார் மற்றும் பல்வேறு மாநில அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது. தேர்தல் களத்தில் எவ்வாறு செயல்படுவது? ஒவ்வொரு  அணியும் தே.மு.தி.க. வெற்றிக்காக எப்படி பங்காற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 

    இதில் திருச்சி மாவட்ட துணை செயலாளர் ஜெயராமன், செயற்குழு உறுப் பினர்கள் ராமு, ராஜ்குமார், பெருமாள், இளைஞர் அணி செயலாளர் சாதிக், மாவட்ட மாணவர் அணி செயலாளர் மணிகண்டன்,பகுதி செயலாளர்கள் மோகன், வெல்டிங்சிவா, லோகராஜ், அய்யாசாமி, நூர்முகமது, கருணாகரன்  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #dmdk #parliamentelection
    Next Story
    ×