search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்? - குஷ்பு கேள்வி
    X

    பிரதமர் மோடி நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்? - குஷ்பு கேள்வி

    பிரதமர் என்ற முறையில் மோடி நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்? என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார். #Kushboo #PMModi
    கோவை:

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் என்ற முறையில் மோடி நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்?. அதை தான் நாங்கள் கேட்டு வருகிறோம். அதற்கு பதில் தரவில்லை என்பதால் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.



    2-ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி மட்டும் தான் 2014-ல் பேசினர். ஆனால் அதில் ஊழல் இல்லை என கோர்ட்டு கூறி விட்டது. 1,76,000 கோடியில் எத்தனை சைபர் இருக்கிறதோ அத்தனை போஸ்டர் அடித்து ஜெயித்திருக்கிறார்கள். இனியும் மக்கள் ஏமாற தயாராக இல்லை.

    தமிழகத்தில் நாங்கள் யாரும் கோஷ்டி பார்க்கவில்லை. காங்கிரசில் எல்லாருக்கும் ராகுல் காந்தி மட்டும் தான் தலைவர். இளம் தலைமுறையினருக்கு கட்சியில் உயர்பதவி அளித்தது நல்ல வி‌ஷயம்.

    ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சியினர் யாரும் ஏற்க மாட்டோம் என்று சொல்லவில்லை. உரிய நேரத்தில் கூட்டணி கட்சிகள் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்வார்கள்.

    கடந்த 2012-ம் ஆண்டு முதல் ராபர்ட் வதேரா மீது குற்றம் சொல்லி வருகின்றனர். நிரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா போல் அவர் ஓடிப்போகவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கும் போதும் ராபர்ட் வதேரா இங்கு தான் உள்ளார்.

    பிரியங்கா காந்தி என்கிற சிங்கம் களத்தில் இறங்கி உள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய 2 பேரும் சேர்ந்து நல்ல செயல்பாட்டை தருவதன் மூலம் புது இந்தியா பிறக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kushboo #PMModi
    Next Story
    ×