என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமண நாளில் காதல் மனைவி கடத்தல் - வாலிபர் போலீசில் புகார்
Byமாலை மலர்21 Feb 2019 11:55 AM GMT (Updated: 21 Feb 2019 11:55 AM GMT)
கும்பகோணத்தில் காதல் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டு திருமண நேரத்தில் மகளை தந்தை கடத்தி மறைத்து வைத்துள்ள சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே கொரநாட்டுக் கருப்பூரை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் சதீஸ்(வயது26). சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபசக்தி(24). பி.டெக். படித்துள்ளார்.
இந்த நிலையில் சதீசும், சுபசக்தியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே காதலியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மன நிலையில் சிங்கப்பூரில் இருந்து சதீஸ் ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து காதலியின் தாயிடம் பேசி திருமணத்துக்கு சம்மதம் பெற்றுள்ளார். இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள சுபசக்தியின் தாயார் மாதவி ஒப்புகொண்டார்.
பின்னர் எப்படியோ இருவீட்டார் சம்மதத்தின் பேரில் காதல் ஜோடிக்கு திருநாகேஸ்வரம் ஒப்பி லியப்பன் கோவிலில் திருமணம் 20-ந்தேதி (நேற்று) நடைபெறுவதாக இருந்தது. அதன்பேரில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது.
இந்த நிலையில் 19-ந்தேதி இரவு மண்டபத்துக்கு மணமகள் வரவில்லையாம். அப்போது சதீசுக்கு போன் செய்த சுபசக்தி, தனது தந்தை திடீரென திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மறுத்து என்னை கடத்தி சென்று தனி அறையில் அடைத்து வைத்துள்ளார்.
இந்த திருமணத்தை நிறுத்தினால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று சுபசக்தி கூறி அழுதுள்ளார். இதையடுத்து காதலி சுபசக்தியின் தந்தை ரவிக்கு போன் செய்த சதீஸ் இது பற்றி கேட்டபோது, தனது மகளை திருமணம் செய்ய வேண்டுமானால் பணம் தரவேண்டும் என்று அதிக தொகை கேட்டதால் சதீஸ் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து நேற்று கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்ற சதீஸ், காதலியின் பெற்றோர் சம்மதத்தின் பேரில் திருமண ஏற்பாடுகளை செய்த நிலையில் திடீரென அவரது தந்தை மற்றும் உறவினர்கள் தனது காதலியை கடத்தி சென்று எங்கோ அடைத்து வைத்துள்ளனர். அவரை கண்டுபிடித்து திருமணத்தை நடத்தி வையுங்கள் என்று புகார் கொடுத்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப சக்தியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
கும்பகோணம் அருகே கொரநாட்டுக் கருப்பூரை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் சதீஸ்(வயது26). சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபசக்தி(24). பி.டெக். படித்துள்ளார்.
இந்த நிலையில் சதீசும், சுபசக்தியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே காதலியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மன நிலையில் சிங்கப்பூரில் இருந்து சதீஸ் ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து காதலியின் தாயிடம் பேசி திருமணத்துக்கு சம்மதம் பெற்றுள்ளார். இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள சுபசக்தியின் தாயார் மாதவி ஒப்புகொண்டார்.
பின்னர் எப்படியோ இருவீட்டார் சம்மதத்தின் பேரில் காதல் ஜோடிக்கு திருநாகேஸ்வரம் ஒப்பி லியப்பன் கோவிலில் திருமணம் 20-ந்தேதி (நேற்று) நடைபெறுவதாக இருந்தது. அதன்பேரில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது.
இந்த நிலையில் 19-ந்தேதி இரவு மண்டபத்துக்கு மணமகள் வரவில்லையாம். அப்போது சதீசுக்கு போன் செய்த சுபசக்தி, தனது தந்தை திடீரென திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மறுத்து என்னை கடத்தி சென்று தனி அறையில் அடைத்து வைத்துள்ளார்.
இந்த திருமணத்தை நிறுத்தினால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று சுபசக்தி கூறி அழுதுள்ளார். இதையடுத்து காதலி சுபசக்தியின் தந்தை ரவிக்கு போன் செய்த சதீஸ் இது பற்றி கேட்டபோது, தனது மகளை திருமணம் செய்ய வேண்டுமானால் பணம் தரவேண்டும் என்று அதிக தொகை கேட்டதால் சதீஸ் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து நேற்று கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்ற சதீஸ், காதலியின் பெற்றோர் சம்மதத்தின் பேரில் திருமண ஏற்பாடுகளை செய்த நிலையில் திடீரென அவரது தந்தை மற்றும் உறவினர்கள் தனது காதலியை கடத்தி சென்று எங்கோ அடைத்து வைத்துள்ளனர். அவரை கண்டுபிடித்து திருமணத்தை நடத்தி வையுங்கள் என்று புகார் கொடுத்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப சக்தியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X