search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்கள்
    X

    கல்லூரி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்கள்

    பொள்ளாச்சி அருகே நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவியை ஆபாசமாக வீடீயோ எடுத்து மிரட்டிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோதிநகரை சேர்ந்த சபரிராஜன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று கல்லூரி மாணவியை செல்போன் மூலமாக தொடர்பு கொண்ட சபரிராஜன் உணவு இடைவேளையில் கல்லூரியை விட்டு வருமாறும், வெளியே செல்லலாம் என்று கூறினார்.

    இதனை நம்பிய மாணவி கல்லூரியில் இருந்து வெளியே வந்தார். அங்கு நண்பர்கள் 3 பேருடன் சபரிராஜன் காரில் தயாராக நின்று கொண்டு இருந்தார்.

    அவர்கள் மாணவியை காரில் பின் இருக்கையில் அமர வைத்து ஊஞ்சவேலம்பட்டிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென சபரிராஜன் மாணவியின் துப்பட்டாவை கழற்றி உள்ளார். காரின் முன்னால் அமர்ந்து இருந்த சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்த சதீஸ் மாணவியை ஆபாசமாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

    இதில் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். இதனால் பயந்தபோன 4பேரும் மாணவி கழுத்தில் அணிந்து இருந்த 1 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மாணவியை தாராபுரம் ரோட்டில் இறக்கி விட்டு விட்டு சென்றனர்.

    பின்னர் மாணவியை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்ட இவர்கள் பணம் கேட்டு மிரட்டினர். மேலும் பணம் தரவில்லை என்றால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினர்.இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.

    அவர்கள் உடனடியாக மாணவியை அழைத்துச் சென்று பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தனர். மாணவி அளித்த புகாரின் பேரில் மாணவியின் நண்பர் சபரிராஜன், மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு, சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த சதீஸ், பக்கோதிபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இவர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×