search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரம்பேசி கூட்டணி அமைத்தவர்கள் என்மீது குற்றம் சுமத்துகிறார்கள்- ராமதாஸ் மீது திருமாவளவன் தாக்கு
    X

    பேரம்பேசி கூட்டணி அமைத்தவர்கள் என்மீது குற்றம் சுமத்துகிறார்கள்- ராமதாஸ் மீது திருமாவளவன் தாக்கு

    பாராளுமன்ற தேர்தலில் பேரம்பேசி கூட்டணி அமைத்தவர்கள் என் மீது குற்றம் சுமத்துகிறார்கள் என்று ராமதாசை திருமாவளவன் சாடியுள்ளார். #Thirumavalavan #Ramadoss

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அ.தி.மு.க. வின் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இளைஞர்களை திருமாவளவன் தவறாக வழி நடத்துகிறார் என்பது உள்பட பல்வேறு கருத்துகளை கூறி திருமாவளவனை தாக்கி பேசினார்.

    இந்த நிலையில் நேற்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு ராமதாஸ் தன் மீது கூறிய கருத்துகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார். அதில் அவர் கூறியதாவது:-

    என்னை தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்து வாழை இலையில் சாப்பாடு பறிமாறிய ராமதாஸ் தி.மு.க. ஒரு துரோக கட்சி, அது அழிந்துபோககூடியது. ஆகவே தி.மு.க. வில் இருந்து வெளியே வரவேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். அதை நான் ஏற்றுக் கொள்ள வில்லை.


    அதில் இருந்து என் மீது வீண் பழி சுமத்தி சேற்றைவாரி தூற்றி வருகிறார். நான் ஒளிவு மறைவு இன்றி திறந்த புத்தகமாக வாழ்ந்து வருகிறேன்.

    தி.மு.க.வில் கூட்டணி சேர்ந்தால் சீட்டு மட்டும் தான் கிடைக்கும், நோட்டு கிடைக்காது என்று எண்ணி சாதி அடிப்படையில் வாக்கு சதவீதத்தை காட்டி, பேரம்பேசி கூட்டணி அமைத்துள்ளனர். அது வர்த்தக ரீதியான வியாபார கூட்டணி.

    நம்மிடம் ஒரே குரல்தான் ஒழிக்க வேண்டும். மோடியை விரட்டி அடிக்க வேண்டும். ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும் என்பது தான்.

    மோடி மறுபடியும் பிரதமராக வந்தால் இனிமேல் நாட்டில் தேர்தல் நடக்காது. மாநில கட்சிகளை ஒழிக்க பா.ஜ.க. அனைத்து வேலைகளையும் செய்துள்ளது. மோடியால் சிறு, குறு தொழில்கள் அழிந்து விட்டன.

    விவசாயம், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கார்ப்ரேட்டுகளின் செல்லப் பிள்ளையாக மோடி திகழ்கிறார். அம்பானி, அதானிக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வெளி நாடு சென்றுவருகிறார். மொத்தத்தில் கார்ப்ரேட் பிரதமராகவே உள்ளார்.

    இந்து சமூகத்தின் முதல் எதிரி மோடி. சாதி வாரியாக மக்களை பிரித்து மொத்த வியாபாரியாக செயல்படுகிறார். இந்த தேர்தலில் மதவாதமா? ஜனநாயகமா? என்று முடிவு செய்யவேண்டும். சாதி வெறி தூண்டல்களில் சிக்கவேண்டாம். எந்த காலத்திலும் சாதியவாதம், மதவாதம் உள்ள பா.ஜ.க. வுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இருக்காது. என்னை சாதியை சொல்லிமட்டுமே குற்றம் சுமத்த முடியும். வேறு எந்த குற்றமும் சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார். #Thirumavalavan #Ramadoss

    Next Story
    ×