என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் - பிரேமலதா
Byமாலை மலர்30 March 2019 5:26 AM GMT (Updated: 30 March 2019 5:26 AM GMT)
நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என கோபியில் நடத்த தேர்தல் பொதுகூட்டத்தில் பிரேமலதா கூறியுள்ளார். #PremaLatha
கோபி:
கோபி பஸ் நிலையம் அருகே தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது. இந்த கூட்டணி அமைய கூடாது என திமுக பல்வேறு சூழ்ச்சிகளை செய்தது. அதையெல்லாம் முறியடித்து வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக, தேமுதிக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. வெற்றி பெற்று செல்லும் எங்கள் கூட்டணி எம்.பி.க்கள் தமிழகத்திற்கான திட்டங்களை மத்திய அரசை வலியுறுத்தி செயல்படுத்துவார்கள்.
மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி தான் அமையும். அப்போது நதிகளை இணைக்க வலியுறுத்துவோம். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை எடுத்துக்கூறி மறுபரிசீலனை செய்ய வலியறுத்துவோம்.
உலக நாடுகளில் 4-வது வல்லரசு நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. இதற்கு காரணமே பிரதமர் மோடி தான்.
இவ்வாறு அவர் கூறினார். #PremaLatha
கோபி பஸ் நிலையம் அருகே தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது. இந்த கூட்டணி அமைய கூடாது என திமுக பல்வேறு சூழ்ச்சிகளை செய்தது. அதையெல்லாம் முறியடித்து வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக, தேமுதிக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. வெற்றி பெற்று செல்லும் எங்கள் கூட்டணி எம்.பி.க்கள் தமிழகத்திற்கான திட்டங்களை மத்திய அரசை வலியுறுத்தி செயல்படுத்துவார்கள்.
மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி தான் அமையும். அப்போது நதிகளை இணைக்க வலியுறுத்துவோம். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை எடுத்துக்கூறி மறுபரிசீலனை செய்ய வலியறுத்துவோம்.
உலக நாடுகளில் 4-வது வல்லரசு நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. இதற்கு காரணமே பிரதமர் மோடி தான்.
இவ்வாறு அவர் கூறினார். #PremaLatha
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X