என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி - வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு
Byமாலை மலர்17 April 2019 8:31 AM GMT (Updated: 17 April 2019 8:31 AM GMT)
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. #MaduraiChithiraiFestival #VaigaiDam
கூடலூர்:
மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நாளை மறுநாள் (19-ந் தேதி) நடைபெற உள்ளது.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் மூல வைகையாறு முற்றிலும் வறண்டு போய் உள்ளது.
மேலும் முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியிலும் மழை குறைந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.
இந்த தண்ணீர் தேனி மாவட்ட குடிநீருக்கு கூட போதவில்லை. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை.
சித்திரை திருவிழாவிற்காக கூடுதல் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மாலை 5 மணி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சிறிய மதகுகள் வழியாக வினாடிக்கு 1500 கன அடி, குடிநீருக்கு 60 என மொத்தம் 1560 கன அடி வீதம் வைகை ஆற்றில் செல்கிறது.
தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு 19-ந் தேதி மாலை நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் 19-ந் தேதி காலை மதுரையை சென்றடையும். இதன்மூலம் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தண்ணீர் வரத்து அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 40.45 அடியாக குறைந்துள்ளது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.10 அடியாக உள்ளது. வருகிற 100 கன அடி அப்படியே திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 33.35 அடியாக உள்ளது. வரத்து இல்லை 10 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 84.46 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கடந்த 2 மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் சாரல் மழை பெய்ததால் பூமி குளிர்ந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரியாறு 14.4, கூடலூர் 1.2, வைகை அணை 6.2, சோத்துப்பாறை 7, கொடைக்கானல் 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #MaduraiChithiraiFestival #VaigaiDam
மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நாளை மறுநாள் (19-ந் தேதி) நடைபெற உள்ளது.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் மூல வைகையாறு முற்றிலும் வறண்டு போய் உள்ளது.
மேலும் முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியிலும் மழை குறைந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.
இந்த தண்ணீர் தேனி மாவட்ட குடிநீருக்கு கூட போதவில்லை. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை.
சித்திரை திருவிழாவிற்காக கூடுதல் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மாலை 5 மணி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சிறிய மதகுகள் வழியாக வினாடிக்கு 1500 கன அடி, குடிநீருக்கு 60 என மொத்தம் 1560 கன அடி வீதம் வைகை ஆற்றில் செல்கிறது.
தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு 19-ந் தேதி மாலை நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் 19-ந் தேதி காலை மதுரையை சென்றடையும். இதன்மூலம் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தண்ணீர் வரத்து அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 40.45 அடியாக குறைந்துள்ளது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.10 அடியாக உள்ளது. வருகிற 100 கன அடி அப்படியே திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 33.35 அடியாக உள்ளது. வரத்து இல்லை 10 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 84.46 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கடந்த 2 மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் சாரல் மழை பெய்ததால் பூமி குளிர்ந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரியாறு 14.4, கூடலூர் 1.2, வைகை அணை 6.2, சோத்துப்பாறை 7, கொடைக்கானல் 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #MaduraiChithiraiFestival #VaigaiDam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X