என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவாரத்தில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி- வாலிபர் கைது
Byமாலை மலர்31 May 2019 4:24 PM GMT (Updated: 31 May 2019 4:24 PM GMT)
வீட்டுக்குள் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூணாண்டிபட்டியைச் சேர்ந்த பாண்டியன் மகள் மங்கையர்கரசி (வயது 26). இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் தனது மகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் ராஜ்குமார் (25) நைசாக வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் மங்கையர்கரசியை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ய முயன்றார். அவர் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வரத் தொடங்கினர். இதனால் மங்கையர்கரசிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து தேவாரம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X