என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
7 லட்சம் பேருக்கு அன்னதானம்- பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்1 Nov 2021 10:04 AM GMT (Updated: 1 Nov 2021 10:04 AM GMT)
‘நம்மவரின் ஐயமிட்டு உண்’ என்ற பெயரில் 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு வருகிற 7-ந்தேதி 67-வது பிறந்தநாள் ஆகும்.
இதனை சிறப்பாக கொண்டாட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
இதையொட்டி இன்று முதல் நவம்பர் 7-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ‘நம்மவரின் ஐயமிட்டு உண்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
தொடக்க விழாவையொட்டி இன்று 7 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் வகையில் 9 வாகனங்களை கமல்ஹாசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனங்களை சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கினார்கள்.
இதேபோன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X