search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த கமல்ஹாசன்
    X
    7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த கமல்ஹாசன்

    7 லட்சம் பேருக்கு அன்னதானம்- பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார்

    ‘நம்மவரின் ஐயமிட்டு உண்’ என்ற பெயரில் 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு வருகிற 7-ந்தேதி 67-வது பிறந்தநாள் ஆகும்.

    இதனை சிறப்பாக கொண்டாட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

    இதையொட்டி இன்று முதல் நவம்பர் 7-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ‘நம்மவரின் ஐயமிட்டு உண்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இதன் தொடக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    தொடக்க விழாவையொட்டி இன்று 7 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் வகையில் 9 வாகனங்களை கமல்ஹாசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனங்களை சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கினார்கள்.

    இதேபோன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    Next Story
    ×