search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலப்பாளையம் சந்தையில் திரண்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்.
    X
    மேலப்பாளையம் சந்தையில் திரண்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்.

    மேலப்பாளையம் சந்தையில் ஒரு ஆடு ரூ.27 ஆயிரத்திற்கு விற்பனை

    மேலப்பாளையம் சந்தை வாசலில் பொதுமக்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. சந்தைக்கு வந்த வியாபாரிகள், பொதுமக்கள் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், முக்கூடல், வள்ளியூர் உள்ளிட்ட இடங்களில் கால்நடை சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

    இதில் மேலப்பாளையம் சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமைகளில் நடைபெறும். இங்கு ஆடுகள் மட்டுமல்லாது மாடு, கோழி, கருவாடு உள்ளிட்டவையும் விற்பனைக்கு வருவது வழக்கம்.

    இதனை வாங்கவும், விற்கவும் ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்வார்கள்.

    ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மேலப்பாளையம் சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.

    நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடுப்படுவதையொட்டி இன்று மேலப்பாளையம் சந்தையில் விற்பனை அதிகரித்தது.

    நேற்று இரவு முதலே ஏராளமான வியாபாரிகள் தங்களது ஆடு, மாடுகளுடன் சந்தைக்கு வந்தனர். இன்று காலை வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் 4 ஆயிரம் பேர் அங்கு திரண்டனர்.

    சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. அவை ரூ.5 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கோழிகள் உள்ளிட்டவைகளும் அதிக அளவில் விற்பனை ஆனது.

    கொரோனா தடுப்பு விதிகள் அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு சந்தை வாசலில் சானிடைசர் வழங்கப்பட்டது. சந்தைக்கு வந்த வியாபாரிகள், பொதுமக்கள் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    மாநகராட்சி ஊழியர்களும் மைக் மூலமாக கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.



    Next Story
    ×