என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சொர்ணமுகி ஆற்று பாலம் உடைந்தது: கும்மிடிப்பூண்டியில் 10 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது
Byமாலை மலர்21 Nov 2021 12:15 PM GMT (Updated: 21 Nov 2021 12:15 PM GMT)
கும்மிடிப்பூண்டி முதல் எளாவூர் சோதனைச் சாவடி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.
ஆந்திராவில் பெய்த பலத்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லூரில் உள்ள சொர்ணமுகி ஆற்றின் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திராவுக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கும்மிடிப்பூண்டி முதல் எளாவூர் சோதனைச் சாவடி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. 10 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. வாகன போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். ஆந்திராவுக்கு செல்லும் வாகனங்கள் கவரப்பேட்டை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X