search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    75 நாட்களுக்கும் மேலாக ஆழியார் அணையின் நீர் இருப்பு 115 அடியாக உள்ளது
    X

    75 நாட்களுக்கும் மேலாக ஆழியார் அணையின் நீர் இருப்பு 115 அடியாக உள்ளது

    • கடந்த 2 வார காலமாக மழை சற்று குறைந்து வெயிலின் தாக்கம் இருந்தது.
    • நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 380 தண்ணீர் வரத்து இருந்தது.

    பொள்ளாச்சி:

    கோடை மழைக்கு பிறகு ஜூன் 2-வது வாரத்தில் இருந்து தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஆழியார் அணைக்கு வழக்கத்தை விட நீர்வரத்து அதிகமாக இருந்தது.

    பல நாட்கள் இரவு, பகலாக தொடர்ந்து பெய்த மழையால் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் 110 அடியை அணை எட்டியது.

    அதன்பிறகும் மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருந்தது. 118 அடியை எட்டியதும் அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கடந்த 2 வார காலமாக மழை சற்று குறைந்து வெயிலின் தாக்கம் இருந்தது. இருப்பினும் மலைமுகடுகள், நீரோடைகள் வழியாக அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்தது.

    இதனால் அணையின் மொத்த நீர் இருப்பு 75 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் 115 அடிக்கு மேல் நிரம்பியவாறு கடல்போல் காட்சியளிக்கிறது.

    நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 380 தண்ணீர் வரத்து இருந்தது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆழியார் அணையின் நீர்மட்டம் முழு அடியை எட்டி கடல்போல் ததும்புகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை வலுத்தால் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    மேலும் பாசனத்திற்கு போதுமான தண்ணீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆழியார் அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு உள்ளது. நடப்பாண்டில் பெய்த தென்மேற்கு பருவமழையால் ஜூலை மாதம் இறுதியில் முழு அடியை எட்டியது. தொடர்ந்து சில மாதமாக அவ்வப்போது மழை பெய்வதால், 120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் 2 மாதமாக 118 அடியாக இருந்தது.

    தற்போது 115 அடிக்கும் மேல் தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் அணையின் நீர்மட்டம் அதிகபட்சமாக 83 அடியாக இருந்தது. ஆனால் நடப்பாண்டில் 75 நாட்களுக்கு மேலாக 115 அடியையும் தாண்டி இருக்கிறது. வரும் நாட்களில் பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×