search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவன்
    X

    சென்னையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவன்

    • போலீஸ் வேகமாக ஓடிய காரை 1 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று கார் ஓட்டுனரை பிடித்தனர்.
    • சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை ஜாம்பஜார் பாரதி சாலையில் சிறுவன் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    இன்று மாலை 6 மணி அளவில் நெரிசல் மிகுந்த பகுதியான பாரதி சாலையில் திடீரென ஒரு கார் அதிவேகமாக வந்த கார் ஒன்று அங்கிருந்த இருசக்கர வாகனம் மற்றும் பொதுமக்கள் என அனைத்து மீதும் தாறுமாறாக ஓடிய கார் விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உடனடியாக அங்கு இருந்த ஜாம்பஜார் போலீஸ் வேகமாக ஓடிய காரை 1 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று கார் ஓட்டுனரை பிடித்தனர்.

    பிடிப்பட்ட ஓட்டுனரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. தனது உடன் படிக்கும் நண்பருடன், காரை இயக்கி வந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. தனது பெரியப்பாவின் காரை கொண்டுவந்துள்ளது தெரியவந்துள்ளது.

    உடனடியாக விபத்து தொடர்பாக 2 சிறுவர்களிடமும் அண்ணாசதுக்கம் புலனாய்வு பிரிவு போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்திருக்கிறது. 3க்கும் மேற்பட்ட நபர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் ஜாம்பஜார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×