search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அ.தி.மு.க. ஆட்சியில் தான் டெங்கு மரணங்கள் அதிகம்- அமைச்சர்
    X

    அ.தி.மு.க. ஆட்சியில் தான் டெங்கு மரணங்கள் அதிகம்- அமைச்சர்

    • பருவமழையின் நிச்சயமாக எந்த பாதிப்பும் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்.
    • ஒவ்வொரு பருவமழைக்கும் முன்பே சிறப்பு மருத்துவ முகாம் தொடர்ச்சியாக போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் டெங்கு மரணங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்,

    ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை என மூன்று துறைகளையும் சேர்த்து மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.

    தமிழ்நாட்டில் இதற்கு முன் எந்த ஆட்சியிலும் இதுபோன்ற கூட்டம் நடைபெறவில்லை. கூட்டத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.


    பருவமழையின் நிச்சயமாக எந்த பாதிப்பும் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம். ஒவ்வொரு பருவமழைக்கும் முன்பே சிறப்பு மருத்துவ முகாம் தொடர்ச்சியாக போடப்பட்டுள்ளது.

    நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் காய்ச்சலுக்கு உடனடியாக முகாம் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.அக்டோபர் 15 தேதியிலிருந்து மழை தொடங்கிய பிறகு தொடர்ந்து மருத்துவ முகாம் நடத்தப்படும்.


    டெங்கு, மலேரியா காய்ச்சல்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

    தமிழ்நாட்டில் எங்கே டெங்கு உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவரை காட்டச்சொல்லுங்க, அ.தி.மு.க. ஆட்சியில் தான் 2012ல் டெங்கு இறப்பு 66 பேர், 2017ல் 65 பேர் என பட்டியலிட்டார்.

    கடந்த அதிமுக ஆட்சியில்தான் தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கான டெங்கு மரணங்கள் ஏற்பட்டன. அதற்கு பின் ஒற்றை இலக்கு தான். 9 மாதம் கடந்து டெங்கு இறப்புகள் இந்த வருடம் 6 பேர் தான். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    Next Story
    ×