search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாம்பரம்-நாகர்கோவில் இடையே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து
    X

    தாம்பரம்-நாகர்கோவில் இடையே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து

    • தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
    • நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 22-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரம் பணிமனையில் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-20691) வருகிற 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதே போல, நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (20692) வருகிற 22-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூரில் இருந்து சேலத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22153) 23-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

    சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12653) 24-ம் தேதியில் இருந்து ஆகஸ்டு 1-ம் தேதி வரை செங்கல்பட்டில் இருந்து புறப்படும். ஐதராபாத்தில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12760) 22-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை சென்னை கடற்கரை சென்றடையும். அதேபோல, தாம்பரத்தில் இருந்து ஐதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12759) 22-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.

    செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (20684) 22, 24, 26, 27, 29, 31 ஆகிய தேதியில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் இந்த ரெயில் விழுப்புரம்-தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (20683) 24, 25, 28, 30 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும்.

    சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635) 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை செங்கல்பட்டில் இருந்து புறப்படும். மேலும் இந்த ரெயில் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12606) 23-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் இந்த ரெயில் செங்கல்பட்டு-சென்னை எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×