search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    BSP Armstrong
    X

    ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்.. களமிறங்கிய காவல் துறை.. பலத்த பாதுகாப்பு

    • கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
    • கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்பவர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை மிரட்டலை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் உறவினர்கள் வசிக்கும் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×