search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    படிக்கும் போதே ரகசிய திருமணம் செய்து குடித்தனம்- கள்ளக்காதலனுடன் ஓடிய காதல் மனைவியால் டிரைவர் தற்கொலை
    X

    படிக்கும் போதே ரகசிய திருமணம் செய்து குடித்தனம்- கள்ளக்காதலனுடன் ஓடிய காதல் மனைவியால் டிரைவர் தற்கொலை

    • காதல் மனைவிக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பது விமல்குமாருக்கு தெரியவந்தது.
    • மனமுடைந்த நிலையில் காணப்பட்ட விமல்குமார், போடிநாயக்கன்பட்டியில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் விமல்குமார் (வயது 21). ஆட்டோ டிரைவர். மேலும் நாமக்கல் அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இவரும், கல்லூரியில் படிக்கும் தருமபுரியை சேர்ந்த மாணவி சுமலதா என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் விமல்குமார், காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பின்னர், நாமக்கல்லில் உள்ள தனது தாத்தா வீட்டில், காதல் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

    இதனிடையே அவரது காதல் மனைவிக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பது விமல்குமாருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமல்குமார், மனைவியிடம் இது பற்றி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய அவரது மனைவி, தனது கள்ளக்காதலனுடன் சென்று விட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட விமல்குமார், போடிநாயக்கன்பட்டியில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விமல்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×