search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உற்பத்தியில் திண்டாடும் மாதவரம் பண்ணை.. ஆவின் பால் வினியோகம் முடங்கும் அபாயம்
    X

    உற்பத்தியில் திண்டாடும் மாதவரம் பண்ணை.. ஆவின் பால் வினியோகம் முடங்கும் அபாயம்

    • வெளி மாவட்டங்களில் இருந்து வரவேண்டிய தினசரி பால் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஆவின் பால் பாக்கெட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆவின் நிறுவனம் வாயிலாக 14.20 லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் அம்பத்தூர் பால் பண்ணையில் 4.20 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலும், மாதவரம் பால்பண்ணையில் 4.50 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலும் தயாரிக்கப்படுகின்றன.

    இந்நிலையில் சென்னை மாதவரம் பால் பண்ணையில் பால் உற்பத்தி கடும் பாதிப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

    ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி இல்லாத காரணத்தால் பால் கொண்டு செல்லும் வாகனங்கள் மாதவரம் பால் பண்ணை வளாகத்திற்குள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 2 லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    வெளி மாவட்டங்களில் இருந்து வரவேண்டிய தினசரி பால் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும் ஆவின் பால் பாக்கெட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆவின் பால் விநியோகம் முற்றிலும் முடங்கியது.

    காலை 7 மணி வரை வெளியூர் செல்ல வேண்டிய வாகனங்கள் புறப்படவில்லை, இதன்பிறகு உற்பத்தி செய்யப்பட்டால் காலை 11 மணிக்கு பிறகே விநியோகம் செய்ய முடியும் என்று பால் முகவர்கள் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×