என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் ஓட்டலுக்குள் புகுந்தது- 30 தொழிலாளர்கள் காயம்
Byமாலை மலர்8 Sep 2022 7:47 AM GMT
- திருவள்ளூரை சேர்ந்த காளிமுத்து பஸ்சை ஓட்டினார். பஸ்சில் 30 தொழிலாளர்கள் இருந்தனர்.
- கடை மூடப்பட்டு இருந்ததால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது.
திருவள்ளூர்:
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தனியார் தொழிற் சாலையில் பணிபுரியும் 30 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று இன்று காலை திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
திருவள்ளூரை சேர்ந்த காளிமுத்து பஸ்சை ஓட்டி னார். பஸ்சில் 30 தொழிலாளர்கள் இருந்தனர். திருவள்ளூரை அடுத்த தொடுகாடு தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக இடதுபுறமாக பஸ்சை டிரைவர் திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடி சாலை ஓரத்தில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது.
கடை மூடப்பட்டு இருந்ததால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது. பஸ்சின் முன்பக்கம் நொறுங்கியதால் டிரைவர் காளிமுத்துவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பஸ்சில் இருந்த 30 பணியாளர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X