search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    32 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
    X

    32 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

    • திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு.

    தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×