search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெண்கலப்பதக்கம் வென்ற நித்யஸ்ரீக்கு முதலமைச்சர் வாழ்த்து
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வெண்கலப்பதக்கம் வென்ற நித்யஸ்ரீக்கு முதலமைச்சர் வாழ்த்து

    • பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் 3 பதக்கத்தை வென்றுள்ளனர்.
    • பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீராங்கனை துளசிமதி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் 3 பதக்கத்தை வென்றுள்ளனர்.

    பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீராங்கனை துளசிமதி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். மற்றொரு தமிழக வீராங்கனையான மனிஷா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இவர் திருவள்ளூரைச் சேர்ந்தவர்.

    பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் நித்யஸ்ரீ சிவன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    இந்நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யஸ்ரீ சிவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யா ஸ்ரீ சிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    நித்யஸ்ரீ சிவனின் திறமை மற்றும் கடின உழைப்பு எங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×