search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை
    X

    ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் "சாகர் கவாச்" பாதுகாப்பு ஒத்திகை

    • கடலோர பகுதிகளில் ‘சாகர் கவாச்’ ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.
    • கிராமங்களில் போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.

    வேதாரண்யம்:

    கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், கடத்தலை தடுக்கவும் 'சாகர் கவாச் ஆபரேஷன்' என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடலோர பகுதிகளில் 'சாகர் கவாச்' ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.

    அந்த வகையில், நாகை மாவட்டம், ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் கடலுக்கு சென்று ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பின்னர், கடலோர மீனவ கிராமங்களான வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட கிராமங்களில் போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர். அங்கு வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தர வேண்டும் என முன்னெச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இன்று காலை தொடங்கிய பாதுகாப்பு ஒத்திகையானது நாளை மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

    Next Story
    ×