search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றாலம் அருவிகளில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
    X

    குற்றாலம் அருவிகளில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

    • புலி அருவி, ஐந்தருவியில் அதிக அளவில் கூட்டம் அலைமோதியது.
    • மெயின் அருவி பகுதியில் அமைந்துள்ள செல்பி பாய்ண்டில் புகைப்படம் எடுத்து குடும்பமாக வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.

    தென்காசி:

    குற்றாலத்தில் சீசன் முடிவடைந்த நிலையிலும் அருவிகளில் சீராக தண்ணீர் விழுந்து வருவதால் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் காலை முதலே உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதை முன்னிட்டு ஓணம் விடுமுறை என்பதாலும் அங்கிருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க முகாமிட்டுள்ளனர்.

    புலி அருவி, ஐந்தருவியில் அதிக அளவில் கூட்டம் அலைமோதியது. மெயின் அருவி பகுதியில் அமைந்துள்ள செல்பி பாய்ண்டில் புகைப்படம் எடுத்து குடும்பமாக வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். அருவிக்கரை பகுதியில் இருக்கும் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    Next Story
    ×