search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. பவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்- மு.க.ஸ்டாலின்
    X

    தி.மு.க. பவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்- மு.க.ஸ்டாலின்

    • நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தி.மு.க. பவள விழா நடைபெறுகிறது.
    • ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்!

    சென்னை:

    சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தி.மு.க. பவள விழா நடைபெறுகிறது. இதற்காக மாநாடு போன்ற பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பேரறிஞர் அண்ணாவால் 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தொடங்கப்பட்ட தி.மு.க.வின் பவள விழா மற்றும் பெரியார், அண்ணா, கட்சி உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.

    இதையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,

    "நான்தான் திராவிடன் என்று நவில்கையில்

    தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!"

    - எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது!

    தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்!

    ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்!

    இன்று மாலை பவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்… என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×