search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீர்வரத்து இருமடங்கு அதிகரிப்பு- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
    X

    நீர்வரத்து இருமடங்கு அதிகரிப்பு- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    • 8000 கன அடியில் இருந்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
    • பரிசல் பயணம் துவங்கிய நிலையில், மீண்டும் தடை விதிக்க வாய்ப்பு.

    ஒகேனக்கல் ஆற்றில், நீர் வரத்து வினாடிக்கு 8000 கன அடியில் இருந்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    இதனால், ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாலை வரை 8000 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளது.

    இதனால், நீர் வரத்து குறைந்ததால் மேற்கொள்ளப்பட்டு வந்த சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    25 நாட்களுக்கு பிறகு 2 நாட்களாக பரிசல் பயணம் துவங்கிய நிலையில், மீண்டும் தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×