search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதே இந்த ஆட்சியின் திட்டம்- எடப்பாடி பழனிசாமி
    X

    எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதே இந்த ஆட்சியின் திட்டம்- எடப்பாடி பழனிசாமி

    • எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்ஜியமாக உள்ளது.
    • முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டிருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டிருக்கும்.

    சேலம்:

    சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். காவல் அதிகாரிகளுக்கு சுதந்திரம் இல்லாததால் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

    * தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.

    * ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது.

    * ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

    * தமிழ்நாட்டில் கொலைகள் நடக்காத நாளே இல்லை.

    * எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்ஜியமாக உள்ளது.

    * காவல் அதிகாரிகளை மாற்றுவதால் சட்டம் ஒழுங்கை காக்க முடியாது.

    * ஓபிஎஸ் அதிமுகவில் இல்லை. அவரை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை.

    * முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டிருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டிருக்கும்.

    * எந்தெந்த துறைகளில் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதே இந்த ஆட்சியின் திட்டம் என்று கூறினார்.

    Next Story
    ×