search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    mk stalin
    X

    தூய்மை பணியாளரின் மகள் நகராட்சி ஆணையர்: கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து-மு.க.ஸ்டாலின்

    • துர்கா குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக பதவியேற்க உள்ளார்.
    • கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது.

    திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துர்கா குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக பதவியேற்க உள்ளார்.

    என் தாத்தாவும், அப்பாவும் தூய்மைப்பணியாளர்கள், அந்த அடையாளத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன்,இன்றிலிருந்து எங்க வாழ்க்கை மாறியுள்ளது என்று துர்கா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், "நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் திருமிகு துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன். கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் திருமிகு துர்கா அவர்களே எடுத்துக்காட்டு. நான் மீண்டும் சொல்கிறேன்…கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×