search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த என்ஜினீயர்
    X

    பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த என்ஜினீயர்

    • மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
    • வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து அவரை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

    நான் விமானத்தில் விமானியாக (பைலட்) பணியாற்றினேன். போட்டி தேர்வில் பங்கேற்க விரும்பியதால், நான் பார்த்து வந்த விமானி வேலையை விட்டு விட்டு, போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தேன்.

    இந்த நிலையில் அவினாசி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் என்ஜினீயரான ஆனந்தராஜ் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார்.

    நாங்கள் கடந்த 2023-ம் ஆண்டு முதல் நெருங்கி பழகி வந்தோம். இதனை அறிந்த எனது தந்தை, ஆனந்தராஜை அழைத்து கேட்டார்.

    அதற்கு அவர், தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், தற்போது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    அத்துடன் இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருவதாகவும், அது முடிந்ததும் உங்களது மகளை திருமணம் செய்து கொள்வதாகவும் எனது தந்தையிடம் தெரிவித்தார்.

    இதனை எனது தந்தையும் நம்பினார். அத்துடன் நாங்கள் பழகுவதையும் தடுக்கவில்லை.

    எனது தந்தை கார் வாங்குவதற்காக ரூ.16 லட்சம் வைத்திருந்தார்.

    கார் வாங்குவது தொடர்பாக எனது தந்தை ஆனந்த ராஜிடம் தெரிவித்தார். அதற்கு அவர் நான் உங்களுக்கு கூடுதலாக பணம் போட்டு வேறு ஒரு புதிய காரை வாங்கி தருவதாக தெரிவித்து, அவரிடம் இருந்த பணத்தையும் வாங்கி கொண்டார். ஆனால் கார் வாங்கி கொடுக்கவில்லை.

    கடந்த ஜூலை மாதம் ஆனந்தராஜ், என்னை அவர் குடியிருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து எனக்கு குளிர்பானம் கொடுத்தார். நானும் அதனை குடித்தேன்.

    அதனை தொடர்ந்து ஆனந்தராஜ் நாம் தான் திருமணம் செய்ய போகிறோமோ இருவரும் உல்லாசம் அனுபவிக்கலாம் என தெரிவித்தார்.

    இதை கேட்டு அதிர்ச்சியான நான், அதெல்லாம் திருமணத்திற்கு பிறகு தான் என மறுத்தேன். ஆனால் ஆனந்தராஜ் வலுக்கட்டாயமாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.

    மேலும் இதனை வீடியோவாகவும் எடுத்து, அதனை லேப்-டாப்பிலும் பதிவு செய்துள்ளார். ஆனால் அது எனக்கு தெரியாது.

    தொடர்ந்து நான் ஆனந்தராஜை சந்தித்து, என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். அத்துடன் என்னை ஜாதியை சொல்லியும் திட்டினார்.

    எனவே என்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த என்ஜினீயர் ஆனந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

    அவரது புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, என்ஜினீயர் ஆனந்தராஜ் மீது கற்பழிப்பு, வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து அவரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×