search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலையை மாத்திட்டு பின்லேடனே வந்தாலும் சரி... - ஜெயக்குமார் உறுதி
    X

    அண்ணாமலையை மாத்திட்டு பின்லேடனே வந்தாலும் சரி... - ஜெயக்குமார் உறுதி

    • சசிகலா அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டார், அவர் மீண்டும் நுழைய முடியாது
    • அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் கூட்டணி இல்லை.

    அ.தி.மு.க முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது என்று அ.தி.மு.க முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா கூறியிருந்தார்.

    இந்நிலையில், சசிகலா அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டார், அவர் மீண்டும் நுழைய முடியாது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் கூட்டணி இல்லை என்கிறீர்கள், ஆனால், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மாற்றப்பட்டால் அ.தி.மு.க நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "அண்ணாமலையை மாற்றி பில்லேடனே வந்தாலும் சரி ஒரு மாற்றமும் இருக்காது முன்வைத்த காலை பின் வைப்பதாக இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×