search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் ஒரு வாரத்திற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம்
    X

    சென்னையில் ஒரு வாரத்திற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம்

    • புழுக்கத்துடன் வியர்வை உடலில் இருந்து வெளியேறும்.
    • காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    கோவை மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலோர பகுதிகளில் காற்றின் வடிவத்தை மாற்றியதால் சென்னையில் பகல் வெப்பம் அதிகரிக்கும்.

    ராயலசீமாவில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள கொமோரின் பகுதிகள் வரை சூறாவளி சுழற்சியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அல்லது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றை முழுவதுமாக கிழக்கு திசைக்கு மாற்றியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    இதனால் காற்றின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இன்று முதல் ஒரு வாரத்திற்கு நகரில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். புழுக்கத்துடன் வியர்வை உடலில் இருந்து வெளியேறும் என்று தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

    மத்திய தமிழகத்தின் உள் பகுதிகளில் பள்ளத்தாக்கு கோடுகள் இருப்பதால் பல உள்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை குறைவாக இருக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கலாம். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதே வேளையில் வெளிச்சம் வர வாய்ப்பு உள்ளது. சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

    Next Story
    ×