search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு இருந்தால் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும்- கே.சி. பழனிசாமி
    X

    விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு இருந்தால் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும்- கே.சி. பழனிசாமி

    • கோவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. 3-வது இடத்தை பிடித்தது.
    • தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் குறைந்ததற்காக எடப்பாடி பழனி சாமி வருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

    கோவை:

    முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவையில் கடந்த மாதம் என்னை பற்றி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்து குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். இந்த வழக்கில் இன்று ஆஜர் ஆனேன். நேற்றும் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். அவர் ஒரு கட்சியின் தலைவர் என்பதை மறந்து தொடர்ந்து கிளைச் செயலாளர் போல் செயல்படுவதையே காட்டியுள்ளார்.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. 3-வது இடத்தை பிடித்தது. தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 2-வது இடம் பிடித்தார். ஆனால் இதற்கு முன்பு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகளை விட 50 ஆயிரம் வாக்குகள் அண்ணாமலை குறைவாக தான் பெற்றுள்ளார் என்று கூறி உள்ளார். சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்ட போது அ.தி.மு.க. வெற்றி பெற்றிருந்தது.

    இதை மறந்து எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு கூறியிருப்பது தி.மு.க.வின் வெற்றிக்கு மகிழ்ச்சியை தெரிவிப்பது போல் உள்ளது. தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் குறைந்ததற்காக எடப்பாடி பழனி சாமி வருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

    ஒரு கட்சியின் தலைவர் என்பவர் அனைவரையும் அரவணைத்து சென்று கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையை எடுப்பவராக இருக்க வேண்டும். யாருக்கு என்ன பதவி கொடுப்பது, யாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவது என்று முடிவு செய்பவராக இருக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீர் குலைந்து வருகிறது. நெல்லையில் காங்கிரஸ் பிரமுகர் கொலை, நேற்று முன்தினம் சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகி, நேற்று சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை என தொடர் கதையாகி வருகிறது. இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்து எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்த வேண்டும். கள்ளச்சாராய சாவு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ள இந்த நேரத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்றிருக்கும்.

    போட்டியிடாததன் மூலம் அ.தி.மு.க. ஓட்டுக்களை பா.ம.க.விற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எடப்பாடி பழனிசாமி மாற்றி விட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×