search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நிதி பகிர்வு- முதலமைச்சராக ஒரு பேச்சு... பிரதமராக ஒரு பேச்சு: கனிமொழி பகிர்ந்த வீடியோ
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நிதி பகிர்வு- முதலமைச்சராக ஒரு பேச்சு... பிரதமராக ஒரு பேச்சு: கனிமொழி பகிர்ந்த வீடியோ

    • குஜராத் மாநிலத்தில் முதலமைச்சாரக பிரதமர் மோடி இருந்த போது மத்திய அரசை விமர்சித்து பேசினார்.
    • இதுதொடர்பான வீடியோவை தி.மு.க. எம்.பி. கனிமொழி எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    சென்னை:

    மத்திய பா.ஜ.க அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. அடுத்த நாள் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    இந்த பட்ஜெட்டில் எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு மத்திய அரசு குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது எனக்கூறி கர்நாடகா, தமிழ்நாடு, கேரள அரசுகள் போராட்டம் அறிவித்தன.

    நேற்று முன்தினம் மத்திய அரசை கண்டித்து கர்நாடக அரசும், நேற்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் போராட்டமும் நடைபெற்றது. தமிழ்நாட்டை சேர்ந்த தி.மு.க எம்.பி.க்கள் கருப்புச் சட்டை அணிந்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் முதல் மந்திரியாக பிரதமர் மோடி இருந்தபோது ஒன்றிய அரசை விமர்சித்துப் பேசிய வீடியோவை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், 'ஒரு காலத்தில் முதலமைச்சர், இப்போது பிரதமர்' என தலைப்பிட்டு தி.மு.க. எம்.பி. கனிமொழி பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில் பேசும் மோடி, குஜராத் மாநில அரசு, மத்திய அரசுக்கு வரியாக ரூ.60,000 கோடியை அளித்து வருகிறது. ஆனால் மத்திய அரசு குஜராத் அரசு திருப்பிக்கொடுப்பது ரூ.8,000 கோடி. ரூ.10,000 கோடி. ரூ.12,000 கோடி. குஜராத் மாநில அரசை என்ன பிச்சைக்காரர் என்று நினைக்கிறீர்களா?

    மத்திய அரசிடம் நிதியைப் பெற குஜராத் மாநில அரசு பிச்சை எடுக்க வேண்டுமா? என தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


    Next Story
    ×