search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கனியாமூர் வன்முறை வழக்கு- 4 மாதங்களில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு
    X

    கனியாமூர் வன்முறை வழக்கு- 4 மாதங்களில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு

    • கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும் புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவு.
    • பள்ளி தாளாளர் ரவிக்குமார் தாக்கல் செய்த மனு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த வன்முறை தொடர்பான வழக்கை 4 மாதங்களில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும் புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    4 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றால் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், வன்முறை தொடர்பான வழக்கை வேறு புலனாய்வு குழுவுக்கு மாற்றக்கோரி பள்ளி தாளாளர் ரவிக்குமார் தாக்கல் செய்த மனு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×