search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
    X

    தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

    • மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.
    • இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 15 மீனவர்களும் 162 மீன்பிடிப் படகுகளும் உள்ளதாக கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    சென்னை:

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டு அவர்களது மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

    இத்தகைய சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல் மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

    இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 15 மீனவர்களும் 162 மீன்பிடிப் படகுகளும் உள்ளதாக கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×