search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தமிழ்நாட்டுக்கும், மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுவேன்: எல்.முருகன்
    X

    தமிழ்நாட்டுக்கும், மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுவேன்: எல்.முருகன்

    • மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரியாக எல்.முருகன் பதவியேற்றார்.
    • மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுவேன் என்றார்.

    சென்னை:

    மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரியாக எல்.முருகன் கடந்த 9-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இருந்து இணை மந்திரி எல்.முருகன் இன்று சென்னை திரும்பினார். தி.நகரில் உள்ள கமலாலயத்துக்கு வந்த இணை மந்திரி முருகனுக்கு வெடி வெடித்து பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தின் பிரதிநிதியாக செயல்பட எனக்கு பிரதமர் மோடி வாய்ப்பு கொடுத்துள்ளார்.

    பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா இருக்கும். அதில் பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பை மோடி அளித்துள்ளார்.

    தமிழ்நாட்டுக்கும், மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுவேன். தமிழகத்திற்கு பெரிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.

    தவறான தகவல் மற்றும் வதந்தி பரப்புபவர்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×