search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக இருந்தது.

    சேலம்:

    கர்நாடகாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை கடந்த மாதம் 30-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்தை விட அதிகளவில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் இந்த ஆண்டில் மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது. மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று அது வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று அது வினாடிக்கு 26 ஆயிரத்து 864 கனஅடியாக குறைந்து காணப்படுகிறது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 26 ஆயிரத்து 864 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவர்ஹவுஸ் வழியாக 21500 கனஅடியும், 16 கண்பாலம் வழியாக 2500 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 123.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரத்து 512 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் கபினி அணைக்கு வினாடிக்கு 5960 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 19 ஆயிரத்து 512 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.

    Next Story
    ×