search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    33 ஆண்டுகளுக்கு முன் விவேகானந்தர் மண்டபத்துக்கு வந்த மோடி- வைரலாகும் புகைப்படம்
    X

    33 ஆண்டுகளுக்கு முன் விவேகானந்தர் மண்டபத்துக்கு வந்த மோடி- வைரலாகும் புகைப்படம்

    • பிரதமர் மோடி தமிழகத்தின் தென்கோடியில் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு நேற்று மாலை வந்தார்.
    • பா.ஜனதா மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷியுடன் விவேகானந்தர் பாறைக்கு அப்போது இளம் தலைவராக இருந்த மோடியும் வந்திருந்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்ததும் பிரதமர் மோடி, தமிழகத்தின் தென்கோடியில் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு நேற்று மாலை வந்தார். தொடர்ந்து அவர் கன்னியாகுமரி கடலில் உள்ள பாறையில் அமைக்கப்பட்டு இருக்கும் விவேகானந்தர் நினைவிடத்துக்கு சென்று, தனது 3 நாள் தியானத்தை தொடங்கினார்.

    இந்தநிலையில் பிரதமர் மோடி கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்னர், இதே விவேகானந்தர் நினைவிடத்துக்கு வந்துள்ளார். அப்போது அவர் அங்குள்ள விவேகானந்தர் சிலையை பார்வையிடும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி, வைரலாகியுள்ளது.

    அதாவது கடந்த 1991-ம் ஆண்டு பா.ஜனதா மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி, ஏக்தா யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு தேசிய கொடி யாத்திரையை தொடங்கினார். 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி கன்னியாகுமரியில் யாத்திரையை தொடங்கும் முன், விவேகானந்தர் பாறைக்கு வந்த அவருடன், அப்போது இளம் தலைவராக இருந்த மோடியும் வந்திருந்தார்.

    அவர்கள் இருவரும் விவேகானந்தர் சிலையை பார்வையிடும் புகைப்படம்தான் தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×