search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    திருத்தணியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
    X

    திருத்தணியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

    • சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் திடீரென மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட கமலேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து போனார்.

    திருத்தணி:

    திருத்தணி எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் லோகநாதன். இவரது மகன் கமலேஷ் (வயது19). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நண்பரான திருத்தணியைச் சேர்ந்த யூசுப் அலி என்பவருடன் மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் கனகம்மாசத்திரம் சென்றனர். பின்னர் அவர்கள் திருத்தணி நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் திடீரென மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட கமலேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து போனார். யூசுப் அலிக்கு படுகாயம் ஏற்பட்டது. அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருத்தணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×