search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடல் கடந்த காதல் கைகூடியது- பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கரம் பிடித்த நாகர்கோவில் வாலிபர்
    X

    கடல் கடந்த காதல் கைகூடியது- பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கரம் பிடித்த நாகர்கோவில் வாலிபர்

    • லாலைனுக்கும், ஜெமி ரென்ஸ்விக்கிற்கும் கடல் கடந்த காதல் ஏற்பட்டது.
    • தமிழக கலாசாரமும், இங்குள்ள மக்களின் அன்பான அரவணைப்பும் எனக்கு மிகவும் பிடித்து போனது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்தவர் குணசீலன். இவருடைய மனைவி மெர்சி. இவர்களுடைய மகன் ஜெமி ரென்ஸ்விக் (வயது 25). எம்.பி.ஏ. பட்டதாரி. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மின்டோனா பகுதியை சேர்ந்த ஜிம்மி ஜமீலா-மெரிட்டா ஜமீலா தம்பதி மகள் லாலைன் (23), பட்டதாரி. லாலைனுக்கும், ஜெமி ரென்ஸ்விக்கிற்கும் கடல் கடந்த காதல் ஏற்பட்டது. பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் புதுமண தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த கடல் கடந்த காதல் கைகூடியது குறித்து மணமகளிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நாங்கள் 4 ஆண்டாக காதலித்தோம். தமிழக கலாசாரமும், இங்குள்ள மக்களின் அன்பான அரவணைப்பும் எனக்கு மிகவும் பிடித்து போனது. இதனை சுற்றுலாவுக்கு கன்னியாகுமரிக்கு வந்த போது உணர்ந்தேன் என்றார்.

    Next Story
    ×