search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு: தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார்
    X

    எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு: தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார்

    • இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கடிதம்.
    • தமிழக உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் எதிர்க்கட்சியினர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதாக குற்றச்சாட்டு.

    எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அதிமுக கடிதம் ஏழுதியுள்ளது.

    அதிமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கடிதம் எழுதியுள்ளார். தமிழக உளவுத்துறை அதிகாரிகள் பெகாசஸ் உள்ளிட்ட மென்பொருள்களை பயன்படுத்தி ஒட்டுக்கேட்பதாக அதில் குற்றம்சாட்டியுள்ளார்.

    தமிழக உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் எதிர்க்கட்சியினர்களின் தொலைபேசிகளை சட்டவிரோதமாக இடைமறித்து மென்பொருகள் மூலமாக உரையாடல்களை ஒட்டுக்கேட்பதாக அவர் மீது அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

    மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×