என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை
- தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று வருவது வழக்கம்.
- ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையானது அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.
சென்னை:
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று வருவது வழக்கம். அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையானது அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவ.12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தில் வருகிறது. இதனால் தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை (கேதார - கவுரி விரத நோன்பு) விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதேபோல கடந்த ஆண்டு தீபாவளி அக்.24-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதற்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று அக்.22-ந் தேதி அரசு அறிவித்தது.
இதனால் கடைசி நேர அறிவிப்பால், மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதிலும், மீண்டும் பணிக்கு திரும்புவதிலும் சிரமம் ஏற்பட்டது. எனவே இந்த ஆண்டாவது முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்